ஆன்லைனில் சம்பாதிக்க - தொழில் பயிற்சி EARN ONLINE, BUSINESS TRAINING
வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம்.
தொழில் : ஆன்லைன் ஜாப்
வருமானம் : Rs.2000 to Rs. 8000/-
Cell: 09566936899

THOLILULAGAM BANK DETAILS
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844

தொழில் கடன் வேண்டுமா? Do you need Business Loan?
குடிசைத் தொழில், குறுந்தொழில், சிறுதொழில்,கடைகள் துவங்க, நிறுவனங்கள் நடத்தவும், கன்சல்டிங் செய்பவர்களுக்கும், தொழிற்சாலைகள் நடத்தவும்,மெசினரிக் கடன்கள், மூலதனக் கடன்கள், பிசினஸ் லோன் பெறவும்
தொடர்புக்கு:
ஸ்கை மேனேஜ்மென்ட் சர்வீஸ்,
122/A5, மூகாம்பிகா காம்ப்ளக்ஸ், 2-வது தளம், அகில்மேடு 6 வது வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம், ஈரோடு - 638001,
செல்: 0-9977464889
தொடர்புக்கு:
ஸ்கை மேனேஜ்மென்ட் சர்வீஸ்,
122/A5, மூகாம்பிகா காம்ப்ளக்ஸ், 2-வது தளம், அகில்மேடு 6 வது வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம், ஈரோடு - 638001,
செல்: 0-9977464889

தொழில் ஆலோசனை (Business Consulting)
சுய தொழில் தொடங்க,
தொழிலை மேம்படுத்த,
மெசினரிகள் வாங்க,
தொழில் சம்பந்தப்பட்ட லோன்கள்,
மார்க்கட்டிங் தொடர்பான சந்தேகங்கள் போன்ற அனைத்திற்கும் ஆலோசனைக்கு போனில் தொடர்பு கொண்டு பின் நேரில் வரவும் :
தொழிலை மேம்படுத்த,
மெசினரிகள் வாங்க,
தொழில் சம்பந்தப்பட்ட லோன்கள்,
மார்க்கட்டிங் தொடர்பான சந்தேகங்கள் போன்ற அனைத்திற்கும் ஆலோசனைக்கு போனில் தொடர்பு கொண்டு பின் நேரில் வரவும் :
செல்: 0 - 9566936899
Erode.
E-mail: tholilulagam@gmail.com
E-mail: tholilulagam@gmail.com

ஆன்லைன் வேலை ONLINR JOB - பெண்கள் மட்டும்
தமிழகம் முழுவதும் டிகிரி படித்த ஆங்கிலம் நன்கு படிக்கத் தெரிந்த லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பியுட்டர் இன்டர்நெட் கனேக்சனுடன் வைத்துள்ளவர்கள் மேலும் கம்பியுட்டரை வேகமாக கையாலத்தெரிந்தவர்கள் மட்டும் எங்கள் இணையத் தளத்தை பார்வையிட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்
இணையத்தள முகவரி :
www.onlinedataproject.blogspot.com
இணையத்தள முகவரி :
www.onlinedataproject.blogspot.com

AGENCY / AGENT
Are you Searching an agency / Agent Opportunity?
Are you plan to appoint an Agent / Agency?
Kindly visit our Website and Post your Needs Free
http://www.agentsrequired.blogspot.com
Are you plan to appoint an Agent / Agency?
Kindly visit our Website and Post your Needs Free
http://www.agentsrequired.blogspot.com

Labels
- சுய தொழில்
- Selfemployment
- சிறு தொழில்கள்
- தொழில் திட்டங்கள்
- Business Advise
- ஆலோசனைகள்
- தொழில் வாய்ப்பு
- Business Plans
- Business Tips
- Business Opportunities
- வீட்டிலிருந்தே தொழில்
- தயாரிப்பு
- பிசினஸ் டிப்ஸ்
- Entrepreneur
- Production
- Home Based
- தொழில் கடன்
- நிதி
- Consultant
- Loans
- Advertising
- Finance
- ஆன்லைன்
- தொழில் பயிற்சி
- இணையதளம்
- மூலதனம்
- Investment
- Export
- ஏற்றுமதி
- வியாபாரம்
- Part Time
- Small Scale Industry
- outsourcing
- பகுதி நேரம்
- விளம்பரத்தொழில்
- Tholilulagam services
- Trading
- Training
- விவசாயம்
- Internet
- Online
- Project
- அவுட்சோர்சிங்
- இயந்திரம்
- இறக்குமதி
- வாங்க / விற்க
- Agri
- Business News
- Import
- Insurance
- BBO
- BPO/Call Center
- Buy/Sale
- Data Services
- Machine
- Marketing
- Video
- software
- காப்பீடு
- பிபிஒ
- மார்க்கெட்டிங்

00:03
உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு! -மாதம் ரூ.1,00,000 லாபம்
Wednesday, 11 April 2018
நாம் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் பல தொழில்கள் இருக்கின்றன. ஆனால், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை போன்றவை நல்ல லாபம் தரக்கூடிய தொழில் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளான சிப்ஸ் தயாரிப்பு பெருகியுள்ளதைப் பல இடங்களில் கண்கூடாகக் காணமுடியும்.
பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலேயே செய்து சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்வது சற்று கடினம். எனவே, இதனை மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கித்தான் சாப்பிடுகின்றனர். மேலும் இதில் நாம் சில நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதால் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும்.
சிறப்பம்சங்கள்
* இந்தத் தொழிலுக்கு போட்டிகள் மிகவும் குறைவு.
* இயந்திரங்களைப் பயன்படுத்தி தயாரிப்பதால் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான சிப்ஸ் தயாரிக்கலாம்.
*எந்தவித நச்சு மற்றும் வேதிப் பொருட்கள் கலப்படம் இல்லை. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
* இதற்கு மிகக் குறைந்த அளவிலான இடம் போதுமானது.
* நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
* அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
செயல்முறை
உலகில் விவசாயத்தில் அதிக அளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உருளைக்கிழங்கு நமது உணவில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதில் மாவுச்சத்து அதிகம். தென் இந்தியாவைவிட வட மாநிலங்களில் உருளைக்கிழங்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் என இருவகை உள்ளது.
இது முழுக்க முழுக்க இயற்கை உணவாகும். சாப்பிடும்போது மொறு மொறு தன்மையுடன் இருக்கும். காரம், மசாலா, உப்பு கலந்து சாப்பிடும்போது சுவை அதிகமாகும். நல்ல தரமான எண்ணெயில் வறுக்கும் சிப்ஸ்கள் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தயாரிப்பு முறைதரமான உருளைக்கிழங்குகளை மண்டிகளில் சென்று வாங்கி, சில நாட்கள் சாதாரண சீதோஷ்ண நிலையில் ஸ்டாக் வைக்கலாம். எளிதில் கெட்டுப்போகாது. தேவைக்கேற்ப ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மொத்தமாகக் குறைந்த விலையில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். உருளைக்கிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி வெளிவரும். இந்தத் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். இங்கும் தண்ணீருடன் வெட்டி வெளிவரும் அதிகமான ஸ்டார்ச் கழுவிவிடும்.
ஈரமான உருளை சிப்ஸ்களை நீர் வெளியேற்றி காய வைக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். இது துணி துவைக்கும் இயந்திரம் போல நீரைச் சுழற்சி மூலம் வெளியேற்றி ஈரம் குறைந்த சிப்ஸ்களை தரும். இந்த சிப்ஸ்களை எண்ணெய் கொப்பரையில் கொட்ட வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இதில் நன்றாகப் பொரிந்துவிடும். பின் எண்ணெயை வடியவிட்டு சிப்ஸ்களைத் தனியாக எடுக்க வேண்டும்.
இந்த சிப்ஸை ஒரு உருளும் இயந்திரத்தில் இட்டு தேவையான உப்பு, காரம் மற்றும் சுவைக்காக மசாலாப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். இப்போது சிப்ஸ்களை முறையாகப் பாலிதீன் பைகளில் போட்டு சீல் செய்து விற்பனை செய்யலாம். பல நாட்கள் வைத்து விற்பனை செய்ய நைட்ரஜன் கேஸ் பேக்கிங் செய்யலாம். அனைத்திற்கும் இயந்திரம் உண்டு.
அனைத்து பேக்கரிகள் சில்லறைக் கடைகள், பார்கள், பெரிய ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். இதே இயந்திரத்தை கொண்டு வீல், பிரயம் போன்ற பொருட்களையும் பொரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
திட்ட அறிக்கை முதலீடு
இடம் : வாடகை
கட்டடம் : வாடகை
இயந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள் : 3.50 லட்சம்
மின்சாரம் &
நிறுவும் செலவு : 0.20 லட்சம்
இதர செலவுகள் : 0.30 லட்சம்
நடைமுறை மூலதனம் : 1.00 லட்சம்
மொத்த முதலீடு : 5.00 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு : 5.00 லட்சம்
நமது பங்கு 5% : 0.25 லட்சம்
அரசு மானியம் 25% : 1.25 லட்சம்
வங்கிக் கடன் : 3.50 லட்சம்
தமிழக அரசின் வேலையில்லா இளைஞர் களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP). இந்தத் திட்டம் மாநில அரசின் திட்டமாகும் இதில் உற்பத்தித் துறைக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம். மானியம் முதல் 5 லட்சம் வரை அல்லது அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை பெறலாம். உங்கள் பங்கு 5%, அரசின் மானியம் 25% (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை) மாவட்டத் தொழில் மையத்தை அணுகிப் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்குத் திட்ட அறிக்கை தேவை.
தேவையான இயந்திரங்கள்
உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம்
சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்
தண்ணீர் வெளியேற்றி உலரவைக்கும் இயந்திரம்
சிப்ஸ் வறுக்கும் இயந்திரம்
மசாலா சேர்க்கும் இயந்திரம்
பாக்கெட் போடும் இயந்திரம்
மூலப் பொருட்கள்
* உருளைக்கிழங்கு
* எண்ணெய்
* மசாலாப் பொருட்கள்
* பேக்கிங் பொருட்கள் அடிப்படை விவரங்கள்
* உருளைக்கிழங்கு மொத்த சந்தையில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ. 20 வரை விற்கப்படுகிறது. நாம் கிலோ ரூ.20க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்திற்குத் தேவையான உருளைக்கிழங்கு வாங்கு வதால் விலை குறைவாகக் கேட்டு வாங்கலாம்.
100 கிலோ உருளைக்கிழங்கிலிருந்து சுமார் 35 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
100gm பேக்கிங் செலவு ரூ.1.50 மற்றும் ஒரு கிலோ சிப்ஸ் பேக்கிங் செலவு ரூ.15 என வைத்துக்கொள்வோம்.
100 கிலோ உருளைக்கிழங்கு பொரிப்பதற்கு 14 லிட்டர் எண்ணெய் தேவைப்படும்.
*மசாலா விலை ரூ.50 என வைத்துக்கொள்வோம்.
கேஸ் சிலிண்டர்
இரண்டு நாட்களுக்கு ஒரு சிலிண்டர் தேவைப்படும். ஒரு நாளைக்கு சிலிண்டர் செலவு ரூ.750. ஒரு மாதத்திற்கு ரூ.19,000 செலவாகும்.
மூலப்பொருட்களின் தேவை:
ஒருநாள் தேவையான
உருளைக்கிழங்கு - 300 கிலோ
300 X Rs.20 - ரூ. 6000/-
ஒரு மாதத்திற்கு - ரூ.1,50,000/-
எண்ணெய் ஒரு நாளைக்கு
45 லிட்டர் X ரூ.70 - ரூ. 3150/-
ஒரு மாதத்திற்கு - ரூ. 78,750/-
மசாலா பவுடர்
ஒரு மாதத்திற்கு - ரூ. 4,000/-
மொத்தம் - ரூ.2,34,000/-
உற்பத்தி மற்றும் விற்பனை வரவு:
ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 2,500 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
ஒரு கிலோ சிப்ஸ் ரூ.300 to ரூ.320-வரை சில்லறை விலையில் கடையில் கிடைக்கிறது. நாம் மொத்த விலைக்கு விற்கும்போது ரூ.200-க்கு விற்பனை செய்யலாம்.
ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் ரூ.20,000
ஒரு மாதத்திற்கு ரூ.5,00,000-க்கு விற்பனை செய்யலாம்.
வேலையாட்கள் சம்பளம்:
மேலாளர் 1 : ரூ.7,000
பணியாளர் 2 : ரூ.10,000
விற்பனையாளர் : ரூ.6,000
மொத்த சம்பளம் : ரூ.23,000
மொத்த செலவு:
மூலப்பொருட்கள் : ரூ.2,34,000
பேக்கிங் மெட்டீரியல் : ரூ.38,000
கேஸ் சிலிண்டர் : ரூ.19,000
மின்சாரம் : ரூ.54,000
சம்பளம் : ரூ.23,000
இயந்திரப் பராமரிப்பு : ரூ.3,000
மேலாண்மைச் செலவு : ரூ.3,000
விற்பனைச் செலவு : ரூ.3,000
தேய்மானம் 15% : ரூ.5,000
கடன் வட்டி : ரூ.4,000
கடன் தவணை
(60 தவணை) : ரூ.6,000
மொத்தம் : ரூ.3,97,000
லாப விவரம்
மொத்த வரவு : ரூ.5,00,000
மொத்த செலவு : ரூ.4,00,000
லாபம் : ரூ.1,00,000
சொந்தத் தொழில் செய்து வாழ்வில் உயர நினைக்கும், உடல் உழைப்பை மூலதனமாக்க தயாராக இருக்கும் யாரும் இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.
Labels:
Business Plans,
Production,
Selfemployment,
சிறு தொழில்கள்,
சுய தொழில்,
தயாரிப்பு
12:26
நல்ல மாவட்ட ஏஜெண்டுகள் போர்டு, ரேடியோ, டிவி விளம்பரம் செய்து, ஐ.எஸ்.ஐ. மார்க்குடன் தரமாக தயாரித்து விற்றால் நல்ல லாபம் பெறலாம்.
சேமியா தயாரிப்பு தொழில்
Tuesday, 10 April 2018
ஒரு காலத்தில் சேமியா பாயாசம் எனும் இனிப்பாக பயன்பட்டது. இன்று அது உப்புமா போல் காரம் சேர்த்து காலை / மாலை உணவாக பயன்படுகிறது. பயாசம் இல்லாத விருந்தே கிடையாது. எனவே நல்ல மார்க்கெட் சேமியாவுக்கு தமிழ்நாட்டில் உறுதியாய் உண்டு.
மூலப்பொருட்கள்
மக்ரோணி கோதுமை மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, தண்ணீர் ஆகியவை மூலப்பொருட்கள். கோதுமை 3 பங்கு என்றால், 1 பங்கு மரவள்ளிக்கிழங்கு மாவுடன் நல்ல தண்ணீர் சேர்த்து கலக்கி இயந்தரம் மூலம் மிக்ஸ் செய்து பின் ‘எக்ஸ்ரூஷன் பிரஸ்’ மூலம் சேமியா தயாரிக்கலாம்.
வேலைவாய்ப்பு
நிர்வாகி – 1, இயந்திரம் ஓட்டுபவர் – 2, உதவியாளர்கள் – 2, விற்பனை பணியாளர் / டிரைவர் / வாகனத்தில் செல்லும் விற்பனை பிரதிநிதி – 5 ஆக மொத்தம் 10 பேர் வரை தேவை. 8 மணி நேரம் பணிபுரிந்தால் மாதம் 10 டன் வரை இந்த இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யலாம்.
மூலப்பொருட்கள் : சென்னை, கோவை, சேலம், கள்ளகுறிச்சி, பொள்ளாச்சி, தேனி ஆகிய நகர்களில் உள்ள பெரிய மார்கெட்களில் வாங்கலாம். மொத்தமாக வாங்கினால் விலை மலிவு.
விரிவான திட்ட முதலீடு மற்றும் தேவையான இயந்திரங்கள், இயந்திரத்தின் விலை மற்றும் கிடைக்குமிடம் ஆகிய விபரங்கள் தேவைப்படின் ரூபாய் 1000/- மட்டும் வங்கி மூலம் செலுத்தி அரை மணி நேரத்தில் பெற்று தொழில் வெற்றி காண வாழ்த்துகிறோம்.
Cell: 9677464889
12:39
குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில் , அல்பியா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.
பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு
Thursday, 5 April 2018
குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம். கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!
சந்தை வாய்ப்பு
தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.
முதலீடு
இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.
கட்டடம்
சுமார் 1,500 - 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும். உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்! ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மூலப் பொருள்
இயந்திரம்
இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.
தயாரிப்பு முறை
மிக்ஸர்
குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.
எக்ஸ்ட்ரூடர்
இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.
கம்ப்ரஸ்ஸர்
கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.
கிரைண்டர்
கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
பிளஸ்
மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ளலாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.
மைனஸ்
இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப்பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.
வேலையாட்கள்
திறமையான வேலையாட்கள் - 3
சாதாரண வேலையாட்கள் - 3
மேலாளர் - 1
விற்பனையாளர் - 1
அக்கவுன்டன்ட் - 1
வாட்ச்மேன் - 2
கூடுதல் வாய்ப்பு
பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண்ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது
07:14
பினாயில் தயாரிப்பு
Tuesday, 27 March 2018
வீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர வாடிக்கையாளர்களை பெற முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் உடுமலை போடிபட்டியை சேர்ந்த இந்திராணி. அவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன புதிதில் கணவரின் வருமானம் போதவில்லை.
பினாயில் தயாரிப்பது குறித்து, இங்குள்ள ஆசிரியர் ஒருவர், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதைக் கற்றுக்கொண்டு, பினாயில் தயாரிப்பை தொழிலாக செய்ய தொடங்கினேன். அப்போது ரூ.100 செலவில் பினாயில் லிக்விட், சென்ட் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு பினாயில் தயாரித்தேன். காலி பாட்டில்களில் ஊற்றி, கடைகளுக்கு விற்றேன். அன்றாட செலவுக்கு பணம் கிடைத்தது.
பின்னர், தொழிலை சிறிது சிறிதாக விரிவு படுத்தினேன். கணவர் உதவிகரமாக இருந்தார். அவர் பினாயில் பாட்டில் களை சைக்கிளில் எடுத்து சென்று உள்ள வீடுகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விற்றார். பினாயில் லிக்விட் 3 தரத்தில் உள்ளது. முதல் தரத்தை கொண்டு பினாயில் தயாரித்தால் பல மாதங்களுக்கு நீர்த்துப்போகாமலும், காலாவதியாகாமலும் இருக்கும். முதல் தரத்தில் தயாரித்ததால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.
8 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நேசக்கரங்கள் அமைப்பு மூலம் ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, நிதியுதவி பெற்று, உற்பத்தி அளவை அதிகரித்தேன். மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கோழிப்பண்ணைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் சென்ட்களை பயன்படுத்தி, பிரத்யேகமாக பினாயில் தயாரித்து கொடுத்ததால், மேலும் மேலும் வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். வாடிக்கையாளர்களை பெறு வதற்காக மேற்கொள்ளும் உற்பத்தி தரத்தை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதுதான் தொழி லுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும்.
புதிய தொழில் முனைவோர் துவக்கத்தில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்று, படிப்படியாக உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பெண்கள் வீட்டிலேயே பினாயில் தயாரிக்கலாம். இதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. குடும்பத்தினர் உதவியுடன் வீடுகள், மருத்துவமனைகள், விடுதிகள், ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
முதலீடு
20 லிட்டர் வாளி 2 (ரூ.400), கப் 2 (ரூ.60), புனல் 2 (ரூ.30). முதலீட்டு செலவுக்கு ரூ.500 போதும். தயாரிப்பு பொருட்கள் : பினாயில் பேஸ்ட், சென்ட் (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ளன) கெமிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை. மூலப் பொருட் களையும், தயாரித்த பினாயிலையும் வைக்க வீட்டில் உள்ள ஒரு அலமாரி போது மானது. பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. நெடி காற்றில் பறந்துவிடும்.
எப்படி தயாரிப்பது?
பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும்.
இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும்.
பிறகு தயாரான பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம்.
உற்பத்தி செலவு
ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மிலி சென்ட் ஆகியவற்றுடன் 30 லிட்டர் தண்ணீர் கலந்தால் 31 லிட்டர் பினாயில் கிடைக்கும். இதை தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் 5 லிட்டர் பினாயில் லிக்விட், 750 மில்லி சென்ட் மூலம் 155 லிட்டர் பினாயில் வீதம், மாதத்தில் 25 நாளில் 3875 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்.
ஒரு லிட்டர் பினாயில் லிக்விட் ரூ.200, சென்ட் ஒரு லிட்டர் ரூ.1300. மாதம் 25 நாள் உற்பத்திக்கு 125 லிட்டர் பினாயில் லிக்விட் தேவை. ஒரு லிட்டர் ரூ.200 வீதம் ரூ.25 ஆயிரம் தேவை. சென்ட் 18.750 லிட்டர் தேவை. ஒரு லிட்டர் ரூ.1300 வீதம் ரூ.24,375 தேவை. உற்பத்தி மற்றும் டெலிவரி கூலி ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 25 நாள் கூலி ரூ.7,500, மினரல் வாட்டர் காலி பாட்டில்கள் தலா 70 காசு வீதம் 3875 காலி பாட்டில்கள் ரூ.2,700. இவ்வாறு ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூ.53,375 தேவை.
மாதம் ரூ.24 ஆயிரம்
ஒரு லிட்டர் பாட்டில் பினாயில் லிட்டர் தயாரிக்க ரூ.13.75 ஆகிறது. அது ரூ.20க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாட்டிலிலும், 5 லிட்டர், 10 லிட்டர் கேன்களிலும் விற்கப்படுகிறது. கேனுடன் 5 லிட்டர் பினாயில் ரூ.130க்கும், 10 லிட்டர் பினாயில் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. மாதம் 3875 லிட்டர் விற்பதன் மூலம் ரூ.24 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
தேவை அதிகம்
பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். குறைந்த லாபத்தில் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.
08:25
காளான் விதை குறைந்த விலையில் வாங்க காளான் வளர்ப்பைப் பற்றி இலவசமாக அறிந்து கொள்ள
Saturday, 10 March 2018
அன்பு தொழில் உலகம் வாசகர்களே!
காளான் வளர்ப்பு நல்ல தொழில் என்றாலும் அத்தொழில் சிறந்த முறையில் உங்களுக்கு பலன் கொடுக்க வேண்டுமெனில் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமான செயல் என்னவெனில் நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து வாங்குவது ஆகும். மேலும் அனுபவம் இன்றியமையாதது. அப்படியென்றால் எனக்கு அனுபவம் இல்லையே நான் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபடக்கூடாதா? என்றால் தாராளமாக செய்யலாம். நீங்கள் உங்கள் ஊருக்கு அல்லது நகருக்கு அருகிலுள்ள பண்ணையில் நேரில் சென்று அந்தப் பண்ணையை பார்வையிட்டு மேலும் அந்த உரிமையாளர்களிடம் உரையாடி அவர்களின் அனுபவ அறிவை பகிர்ந்து கொள்வதோடு மற்றும் காளான் வளர்ப்பைப் பற்றி இலவசமாக தெளிவாக அறிந்து கொண்டபின்பு தொழிலை ஆரம்பிக்கவும். மேலும் அவர்களிடமே நல்ல காளான் வித்துக்களை தேர்ந்தெடுத்தது குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி பயன் பெறவும்.
நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காளான் வளர்க்க மழை காலம் மற்றும் குளிர் காலமே ஏற்றது. வெயில் காலங்கள் உகந்ததல்ல. ஆனால் உங்களால் மிக நல்ல குளிந்த சூழலில் குடில் அமைக்க முடியுமென்றால் தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது என்றால் மட்டுமே வெயில் காலங்களில் வளர்க்கலாம்.
அதுமட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் விவசாயம் சரிவர இல்லாததால் வைக்கோல் கிடைப்பது குதிரைக்கொம்பு. ஏன் என்றால் கேரளாவிலிருந்து வரும் வைக்கோல் லோடு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை விட்கிறார்கள். மேலும் மொத்தமாக மட்டுமே விற்கிறார்கள் குறைந்த அளவுகளில் கொடுப்பது கிடையாது. ஆகவே நீங்கள் 1000 ரூபாயில் காளான் தொழில் ஆரம்பிக்கலாம் என்ற கனவோடு இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் கனவில் மண் விழுந்துவிடும் என்பது நிதர்சனம். 1000 ரூபாயில் மாடு வாங்கி 4000 க்கு விற்க 10000 செலவு செய்து வைக்கோல் வாங்கிய கதையாகிவிடும். ஆகவேதான் முன்பே கூறினேன் காளான் வளர்ப்பில் கவனம் தேவை என்று!
காளான் வளர்ப்பின் நிறைகளை மட்டும் பயிற்சி மையங்களில் தெரிந்து கொண்டு உங்கள் பணத்தை வீணாக்காமல் சிரமம் பார்க்காமல் நேரில் காளான் வளர்க்கும் பண்ணைக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சி மையங்களில் நிறைகளை மட்டுமே கூறுவார்கள் அதனைக்கேட்டு ஏமாறாமல் காளான் பண்ணைத் தொழிலில் மட்டும் ஈடுபடுபவர்களைத் தொடர்பு கொள்ளும்போது அதன் நிறைகள், குறைகள், அனுபவ பகிர்வு, அதன் நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாகவே பெறுவதோடு நேரில் பேரம் பேசி நல்ல காளான் விதைகளை பெற்று பயனடையலாம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!
அனுபவம் கிடைத்தால் ஆகாயத்தில் கடை விரிக்கலாம்!
மேலும் இலைக் காளான்களை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை என்பதால் விற்பனை சதவீதம் மிகவும் குறைவு. மொட்டுக்கு காளான்களை பலரும் விரும்புவதால் விற்பனை வாய்ப்பு அதிகம். ஆனால் மொட்டுக்காளான் மழை பகுதிகளில் மட்டுமே வளரும் சாதாரண நிலத்தில் வளராது.
மேலும் காளான் வளர்ப்பவர்களைவிட வாங்கி விற்பவர்களுக்கே அதிக இலாபம் கிடைப்பதோடு வேளை பளு மற்றும் முதலீடும் குறைவு.
ஒருவேளை உங்களுக்கு காளான் வளர்க்கும் அல்லது காளான் வித்துக்களை மொத்தமாக விற்பவர்கள் யாரையும் தெரியாது என்றால் கவலையே வேண்டாம் கிழே கொடுக்கப்பட்டுள்ள செல் எங்களை தொடர்புகொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண்ணுக்கு ரூபாய் 60 மட்டும் செலுத்தி 20 காளான் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் காளான் வித்து விற்பவர்களின் நேரடி பண்ணை முகவரி, இ மெயில், செல் எண்கள் ஆகியவற்றை தங்களின் மெயிலுக்கு அல்லது WHATSAPP க்கு / IMO க்கு பெற்று பயன்பெறுங்கள்
தொடர்புக்கு: Mrs. Priya, 9677464889
Start your Business success now. Call to our Professional & pay the charges to our followingcompany account
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Team Leader / www.tholilulagam.com
Cell: 0 -9677464889
E-Mail: tholilulagam@gmail.com
Start your Business success now. Call to our Professional & pay the charges to our following
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Cell: 0 -9677464889
E-Mail: tholilulagam@gmail.com
18:27
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.
காளான் வளர்ப்பு Mushroom cultivation - Tips
Wednesday, 7 March 2018
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.
சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?
மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.

விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் தங்களுக்கு வேண்டுமெனில் கவலையே வேண்டாம் கிழே கொடுக்கப்பட்டுள்ள செல் எண்ணுக்கு தொடர்புகொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண்ணுக்கு ரூபாய் 250 மட்டும் செலுத்தி தங்களின் மெயிலுக்கு அல்லது WHATSAPP க்கு / IMO க்குபெற்று பயன்பெறுங்கள்
தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
- நெல் வைக்கோல் காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளர்ப்பு
- நெல் வைக்கோல் கட்டு முறை
- முறுக்கிய வைக்கோல் முறை
- சிப்பிக் காளான் வளர்ப்பு
- சிப்பிக் காளான் குடில் அமைத்தல்
- கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல்
- நீராவியில் பதப்படுத்துதல்
- இரசாயண முறையில் பதப்படுத்ததல்
- காளான் வித்திடுதல்
- பால் காளான் வளர்ப்பு
- பால் காளான் சிறப்பியல்புகள்
- காளான் உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
- காளானின் இரகங்கள்
- காளான் பூஞ்சான் வித்துக்களை உற்பத்தி செய்யும் முறை
- வளர்ச்சி ஊடகத்தை தயாரிக்கும் முறை
- தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை
- காளான் வித்து உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
- காளான் படுக்கை வித்து தயாரிப்பு
- காளான் படுக்கை தயாரிக்கும் முறை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- உணவுக் காளான் வகைகள் படங்களுடன்
- நச்சுக் காளான்கள் படங்களுடன்
- நச்சுக் காளான்களால் உடலில் ஏற்படும் விளைவுகள்
- நச்சுத் தன்மையை அகற்றும் வழிகள்
- குறுகிய கால இருப்பு வைக்கும் முறை
- காளான் வளர்ப்பு திட்ட மதிப்பீடு
- மொட்டுக் காளான் படுக்கை தயாரித்தல்
- நீண்ட கால மற்றும் குறுகிய கால முறையில் மட்கு தயாரித்தல்
- குறுகிய கால முறையில் மட்கு தயாரித்தல்
- மொட்டுக் காளான் திட்ட மதிப்பீடு
- காளான் மற்றும் காளான் வித்து வளர்ப்பவர்களின் முகவாிகள்
- விஷ காளானின் வகைகள்
- விஷ காளான் சில பொதுவான பண்புகள்
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் தங்களுக்கு வேண்டுமெனில் கவலையே வேண்டாம் கிழே கொடுக்கப்பட்டுள்ள செல் எண்ணுக்கு தொடர்புகொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண்ணுக்கு ரூபாய் 250 மட்டும் செலுத்தி தங்களின் மெயிலுக்கு அல்லது WHATSAPP க்கு / IMO க்குபெற்று பயன்பெறுங்கள்
தொடர்புக்கு: Mrs. Priya, 9677464889
Start your Business success now. Call to our Professional & pay the charges to our followingcompany account
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Team Leader / www.tholilulagam.com
Cell: 0 -9677464889
E-Mail: tholilulagam@gmail.com
Start your Business success now. Call to our Professional & pay the charges to our following
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Cell: 0 -9677464889
E-Mail: tholilulagam@gmail.com
Labels:
Business Plans,
Selfemployment,
சிறு தொழில்கள்,
சுய தொழில்,
விவசாயம்
12:02
தொழில் நிறுவனம் அமைத்து தருதல்
Monday, 5 March 2018
தொழில் முனைவோராகிய நீங்கள் ஒரு தொழிலை தெரிவு செய்து விட்டபின்பு அந்த தொழிலை ஆரம்பிக்கும்வரை உள்ள வேலைகள் அனைத்தும் பிசினஸ் செட்டப் எனப்படும்.
மேற்படி வேலைகள் அனைத்தையும் நான் மட்டும் எப்படி தனியாக செய்வது?
குறைந்த செலவில் சரியான பொருட்களை அல்லது சரியான முறைகளை எப்படி தெரிவு செய்வது?
இயந்திரங்களை எங்கு வாங்குவது?
எந்த முறைகளில் அல்லது சிறந்த அதிக பொருட்களை உருவாக்கும் பிராசஸ்களில் இயந்திரங்களை நிலை நிறுத்துவது?
எப்படி திட்டமிடுவது மற்றும் திட்டங்களை எவ்வாறு சரியே செயல்படுத்துவது?
எங்கு நிறுவனத்தை அல்லது தொழிலை அமைப்பது?
என்பன போன்ற குழப்பங்களில் சிக்கி தங்களின் பணத்தையும் பொன்னான நேரத்தையும் வீணடிக்காமல் எங்களின் தொழில் உலகம் குழுவினரை தொடர்பு கொண்டால்
சிறந்த தொழில் நுட்பங்களுடன் இன்றைய தலைமுறைக்கேட்ப, நாளைய மாறுதல்களையும் மனதில் கொண்டு சரியான வழிகாட்டல்களுடன் தேவையான செலவினங்களை சரியான இயந்திரத் தேர்வுகளுடன் வெற்றி பாதையில் அடியெடுத்து வைக்க சேவைக்கட்டணத்தின் பேரில் உதவுகிறோம்.
தொடர்புக்கு:
செல்வம்
ஆசிரியர்
தொழில்உலகம்.காம்
9566936899
11:15
ஏன் தொழில் உலகம் மூலம் தொழிலை தேர்வு செய்ய வேண்டும்?
எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் புதிய தொழில் இறங்கலாமா வேண்டாமா? புதிய பிராடக்டுகளை உருவாக்கலாமா வேண்டாமா? என்று ஆராய தனி துறையையே உருவாக்கி வைத்திருப்பர்.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது முதுமொழி. ஆகவேதான் வளர்ந்த நிறுவனங்கள்கூட இதில் மிக கவனமாக உள்ளனர்.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது முதுமொழி. ஆகவேதான் வளர்ந்த நிறுவனங்கள்கூட இதில் மிக கவனமாக உள்ளனர்.
சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் ஐ டி துறையில் வெற்றி பெற்றபோதும் புதிய ரியல் எஸ்டேட் தொழிலில் ஆராயாமல் இறங்கியதே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று.
இதன் மூலம் தொழிலை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் புதிய தொழில் முனைவோராக இருக்கலாம் அல்லது கூடுதலாக ஏதேனும் தொழில் செய்ய முனையலாம். தொழிலை மாற்ற முயல்வோராக இருக்கலாம். யாராக இருந்தாலும் தொழில் உலகம் குழுவினர் தங்களின் முயர்ச்சியில் சிறந்த ஜி பி ஆர் எஸ் கருவியினைப் போன்று, கூகுள் மேப்பினைப் போன்று சரியான வழியினைக் காட்ட காத்திருக்கிறோம்
10:22
புதிய தொழிலை ஆராய்ந்து தேந்தெடுப்பதில் உதவி Business Research and Selection Support
இன்று ஒவ்வொருவரும் ஒரு தொழிலை செய்து வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் தொழிலில் வெற்றி அடைகின்றனர். தாங்கள் தேந்தெடுத்த தொழில் வெற்றி அடையாமல் போக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொழிலை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கிய காரணியாகும். முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிடக்கூடாது. நாம் சரியான தொழிலை தேர்ந்தெடுக்க விட்டால் அது நம்மை பல்வேறு வகைகளில் பாதிக்கும் அதுமட்டுமின்றி நம்மை சார்ந்துள்ள குடும்பம் நம் எதிர்காலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது. ஆகவேதான் தொழில் உலகம் குழுவினர் இதில் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.
எங்களின் குழுவினர் உங்களின் திறமை, அனுபவம் மற்றும் உங்களின் முதலீடு, உங்களின் மனக்குழப்பம், தேர்ந்தெடுத்த ஐடியாக்கள், அவைகளின் இன்றைய மார்க்கெட் நிலவரம், போட்டி, தேவை ஆகியற்றை ஆராய்ந்து தங்களுக்கான தொழிலை தேந்தெடுப்பதில் குழப்பமின்றி உறுதியுடன் தீர்மானம் எடுத்து வெற்றிக்கான பாதையில் களமிறங்கி முன்னேற குறைந்த கட்டணத்தில் உதவுகிறோம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்பது இழுக்கு
ஒரு செயலை செய்யுமுன் பலமுறை யோசித்து அதன்பின் அதில் இறங்கி துணிந்து செயல்பட வேண்டும் என்று அனைத்தும் உணர்ந்த நமது திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
ஆகவே தொழில் உலகம் குழுவினர் உங்களுக்கு சரியான வழியினைக் காட்ட தயாராக உள்ளனர். இதனைப் பயன்படுத்தி தங்களின் பணத்தையும் உழைப்பையும் சரியான தொழில் மற்றும் வெற்றிகரமான தொழிலில் முதலீடு செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்!
தொடர்புக்கு:
செல்வம்
ஆசிரியர்
தொழில்உலகம்.காம்
9566936899
16:00
E Mail Marketing Service மின்னஞ்சல் மார்க்கெட்டிங் சேவை
Friday, 23 February 2018
தொழில் உலகம் நண்பர்களே! நிறுவன உரிமையாளர்களே! வாசகர்களே!
மாறிவரும் உலக நடைமுறைகளுக்கேட்ப தொழிலை மார்க்கெட்டிங் செய்வதட்கான முறைகளும் மாறி வருகிறது. ஆகவேதான் தொழில் உலகம்.காம் இ- மெயில் மார்க்கெட்டிங் சேவையினை E mail Marketing Service அளிக்கவிருக்கிறது.
இந்த சேவையின் மூலம் உங்களை தொழில் பற்றிய விபரங்களை அல்லது உங்களது தயாரிப்புக்களை பற்றி அல்லது விற்கும் பொருட்களின் விபரங்களை படத்துடன் வேர்டு அல்லது பிடிஎப் பார்மேட்டில் மொத்தமாக பலருக்கும் அனுப்பி வைக்க இயலும்.
இதனால் உங்களின் நேரம் மிச்சப்படுவதோடு உங்களின் மார்க்கெட்டிங் செலவும் Marketing Expenses குறைக்கப்படுகிறது.
தொழில் உலகம் மிகக் குறைந்த செலவில் பல்வேறு பேக்கேஜுகளில் கொடுப்பதனால் உங்களின் தேவை, மற்றும் பொருளாதார வசதிக்கேட்ப இ-மெயில் அளவினை தேர்ந்தெடுக்கலாம்.
குரூப் A - 1000 மெயில்கள்
குரூப் B - 5000 மெயில்கள்
குரூப் C - 10000 மெயில்கள்
குரூப் D - 25000 மெயில்கள்
குரூப் E - 50000 மெயில்கள்
குரூப் F - 100000 மெயில்கள்
மெயில் அனுப்பப்பட்டதற்கான ரிப்போர்ட் இ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்
எங்களது மின்னஞ்சல் மார்க்கெட்டிங் சேவை தேவைப் படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் அல்லது இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Cell: 09566936899
E Mail: tholilulagam@gmail.com
02:16
சுயதொழில் - பாக்கு மட்டை பிளேட் தயாரிப்பு
Monday, 12 February 2018
இயற்கையாகக்
கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க
பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த
வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு
வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும்
வரவேற்பைப் பெற்று வருகிறது. விசேஷங்களில்
பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய
பொருளாக மாறிவிட்டது.
இதன்
காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும்
தொழில் இப்போது கனஜோராக நடந்து
வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த
முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும்
இந்த தொழில் நிச்சயம் கை
கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு
ஏதுவான தொழில் இது.
தயாரிக்கும்
முறை!
பாக்கு
மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து
முதல் பத்து நிமிடங்கள் ஊற
வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால்
சுத்தம் செய்து அதிலிருக்கும்
அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம்
செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது
மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளலாம்.
இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது தடுக்கப்படும்.
பிறகு அந்த மட்டைகளை சூரிய
வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ
உலர வைக்க வேண்டும். ஆனால்,
மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது.
பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக
வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில்
கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால்
மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு
பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே
கட் செய்து எடுத்து, சுத்தம்
செய்தால் விற்பனைக்கு ரெடி!
வேலையாட்கள்!
இந்த
தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு
முதல் ஏழு நபர்கள் வரை
வேலைக்கு தேவை. பெரும்பாலும்
வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த
தொழிலை செய்துவிடலாம்.
தயாரிக்கப்படும்
அளவுகள்!
12 இஞ்ச்
அளவு கொண்ட பிளேட் கல்யாண
வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு
விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும்,
8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள்
வழங்குவதற்கும் பயன்படுகின்றன.
சாதகங்கள்!
* சுற்றுச்சூழலுக்கு
ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை
வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில்
வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும்,
பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
* மைக்ரோவேவ்
அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை
சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய
வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற
வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.
பாதகங்கள்!
மழைக்
காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே,
மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை
வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல்
திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு
மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை
தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை
பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்கும் இடங்கள், தேவையான முதலீடு தொகை எவ்வளவு?, பைனான்ஸ் கிடைக்குமா?, மானியம் பெறுவது எப்படி? மானியம் எங்கு எப்போது கிடைக்கும்? என்னென்ன இயந்திரங்கள் தேவைப்படும்? பிளேட் விற்பனை விலை நிர்ணயம் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் தேவைப்படின் Rs. 250/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு அல்லது மொபைல் Whats App-ல் பெற்றுக் கொள்ளலாம்.
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
தொடர்புக்கு: ஜெயசெல்வன்: Cell: 9566036899
பாக்கு மட்டை பிளேட் தயாரிக்கும் இயந்திரம் வாங்க தொடர்புக்கு: 07373630788
லோன் பெற பிராஜெக்ட் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் Rs.2500/- பணம் செலுத்தி இ- மெயிலில் பெற்றுக் கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
சூப்பர் டிப்ஸ்...( Super Tips) ''அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ்(Business) பண்ணி சம்பாதிக்கப் போறேன்!'' ...
-
தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று ...
-
”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர். தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சு...
-
நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்க...
-
பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் பொள்ளாச்சி அடுத்த கேர...
-
மதுரை : ""சாதாரண முதலீடு, குறைந்தபட்ச ஆங்கில அறிவு இருந்தால் இன்டர்நெட் மூலம் ஏற்றுமதி தொழிலில் ஜெயிக்கலாம்'' என மதுரை...
-
ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தேவைப்படும் நாடுகளின் விபரங்கள் (Export Products and Required Countries)வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ம...
-
வேலை வாய்ப்புகள் இல்லை என கவலைப் படுவதை இன்றே தூக்கி எறியுங்கள். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க உங்களைத்தான் அழை...

About Me

-
Tholil Ulagam
- I am creative & Innovative. I am interested to help someone in anyway. Especially this site give me a chance to help others. This www.tholilulagam.com is stepping stone for the Business Start up Peoples and who search the Business Ideas. So i am expecting some support like paid article from the companies / Entrepreneurs.

தொழில் உலகம் ஆன்லைன் பத்திரிக்கைக்கு தொழில் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள், நிறுவன மற்றும் புதிய / நவீன பொருட்களின் அறிமுகங்கள், வர்த்தக விளம்பரங்கள், வரிவிளம்பரங்கள் சேகரிக்க அனுபவம் அல்லது ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக தேவை. முழுநேரம் / பகுதிநேரம் பணியாற்றி நல்ல வருமானம் ஈட்டலாம். - தொழில் உலகம். காம்,
VACANCY: ALL TAMILNADU CITIES
CONTACT: Admin Office, Erode
தொடர்புக்கு : 0 - 95669368997
VACANCY: ALL TAMILNADU CITIES
CONTACT: Admin Office, Erode
தொடர்புக்கு : 0 - 95669368997
Mail:tholilulagam@gmail.com

Sidebar Ads
நீங்கள்
தொழில் நடத்துபவரா?
தொழில் ஆலோசகரா?
தொழில் கடன் தருபவரா?
( Business Loan)
தொழில் ஆரம்பிக்கவிருப்பவரா?
மெசினரிகள் தயாரிப்பவரா?
பொருட்களை வாங்கி விற்பவரா?
முகவர்கள் தேவைப்படுவவரா? (Agents)
பங்குதாரர்கள் ( Partners ) தேவைப்படுவவரா?
நிறுவனத்தை, தொழிலை
மக்களிடம் அறிமுகம் செய்ய வேண்டுமா?
மேற்படித் தேவைகள் எதுவாயினும்
தொழில்உலகம்.காமில் விளம்பரம் செய்து
பயன்பெறுவீர். வெற்றியடைவீர்!
வாழ்த்துக்களுடன்
தொழில்உலகம்.காம்
Mail: tholilulagam@gmail.com
09566936899
தொழில் நடத்துபவரா?
தொழில் ஆலோசகரா?
தொழில் கடன் தருபவரா?
( Business Loan)
தொழில் ஆரம்பிக்கவிருப்பவரா?
மெசினரிகள் தயாரிப்பவரா?
பொருட்களை வாங்கி விற்பவரா?
முகவர்கள் தேவைப்படுவவரா? (Agents)
பங்குதாரர்கள் ( Partners ) தேவைப்படுவவரா?
நிறுவனத்தை, தொழிலை
மக்களிடம் அறிமுகம் செய்ய வேண்டுமா?
மேற்படித் தேவைகள் எதுவாயினும்
தொழில்உலகம்.காமில் விளம்பரம் செய்து
பயன்பெறுவீர். வெற்றியடைவீர்!
வாழ்த்துக்களுடன்
தொழில்உலகம்.காம்
Mail: tholilulagam@gmail.com
09566936899
